Skip to main content
சென்ற மாத இதழின் தொடர்ச்சி:
            இன்று தொழுகையை பற்றி சில முஸ்லிம்களின் பார்வையானது, வெறும் சடங்காகவே பார்க்கப்படுகின்றது ,சிலர் அறியாமையால் அதை யோகா என்றும் கருதுகின்றனர் இதிலிருந்து நாம் சற்று மாற்றமாக சிந்திக் கடமைப்பட்டுள்ளோம்.
            ஹய்யா அலல் ஸலாஹ் ஹைய்யா அலல் ஃபலாஹ்,தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொழியில் கேட்க கூடிய வாசகங்கள் தான்!
                                                                                                                      قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 
                                                 
. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்(23:1)

                                                                                                                     الَّذِيْنَ هُمْ  في صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏
 அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(23:2)
               இந்த ஆயத்தில் நாம் اَفْلَحَ வெற்றி மற்றும் صلاة தொழுகை இணைந்து வருவதை காணலாம்
         
                அப்பொழுது தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்?

                நாம் ஐந்து வேளைத் தொழுவதால் வெற்றி அடைந்து விடுவோமா?

                நமது வாழ்க்கையில் நடக்கும் தோழ்விகளுக்கு நாம் தொழாததுதான்    காரணமா?


                 நாம் தொழுதும், வாழ்க்கையில் வெற்றி அடையவில்லையே,                  அப்பொழுது அது மறுமையில்  அடையும் வெற்றியை தான் குறிக்கிறதா?

               ஆனால் ஃபலாஹ் என்பது ஈருலக வெற்றியையும் குறிக்கும் சொல்லாயிற்றே!

                அண்ணல் நபி(ஸல்)அவர்கள தவராது் தொழுதார்களே அவர்களுக்கு ஈருலகிலும்  வெற்றி தானே!

                நபித்தோழர்கள் தவராது தொழுதார்களே,அவர்களும் வெற்றி அடைந்தார்கள் தானே!

               இது போன்ற கேள்விகளுக்கு விடை காணுவதற்கு முதலில் நாம் 'ஃபலாஹ்'என்ற சொல்லின் பொருளைப் பற்றி தெரிந்துக்கொள்ள  வேண்டும்.

                ஃபல்லாஹ் என்ற சொல்லின் பொருள்:
விவசாயி,உழவர்,வேளாளர் போன்றவற்றை குறிக்கும்

                 ஃபலஹ என்பது:
உழுதல்,பயிரிடுதல்,செழிப்பாக்குதல்,மகிழ்ச்சி,வெற்றி போன்றவற்றை குறிக்கும்

                 இதை வைத்து ஃபலாஹ் என்பது விவசாயம், மகிழ்ச்சி,வெற்றி ஆகிய மூன்று பொருள்களையும்   சேர்த்து குறிக்கும் சொல்லாக நாம் பார்க்கலாம்

                  ஓர் விவசாயி விதையை விதைத்து அது பியிரான பிறகு, அந்த பயிரை அறுவடை செய்கின்றபோது அடையும் மகிழ்ச்சியை, தொழுகையின் போது விதைக்கப்பட்க்கூடியவைகள்;நற்பயன்களை அறுவடை செய்யக் கூடிய விளைவை நோக்கி செல்கின்றது, என்பதோடு நம்மால் ஒத்திப்பார்க்க முடிகின்றது.அதுவே வெற்றியாக கருதப்படுகின்றது.
                   ஆக தொழுகை எப்படி வெற்றியோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்த்தோம்
                    இப்பொழுது இந்த தொழுகையானது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டுள்ளதா?என்பதை நாம் சற்று ஆராய்வோம்

                    யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ ,அவர் தீனை நிலை நிறுத்தியவராவார்" என்ற நபிமொழியை நாம் முன்னதாகவே கூறியிருந்தொம்,இதில் 'தீன்' என்ற சொல்லின் பொருள் மார்க்கம்,மார்க்கம் என்றால் 'முழுமையான வாழ்க்கை நெறி'ஆகும்

                    ஆக தொழுகை என்பது வாழ்க்கையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட சடங்கல்ல,அது வாழ்க்கை நெறியோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஓர் அற்புதமான இபாதத்

                    இதன் நுட்பத்தை புரிந்துக்கொண்டு,உமர் பின் கத்தாப்(ரலி)அவர்கள் கலீஃபாவாக இருந்த போது தமது ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:
                    உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே!எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ,அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ,அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான்.எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ,அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்க கூடியவனாகவே இருப்பான்(மிஷ்காத்) 
               அப்பொழுது தொழுகைக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அடிப்படையாக கொண்டு
               தொழுகையோடு வாழ்க்கையோடு எப்படியெல்லாம் தொடர்புடையது என்பதையும் அது எப்படி வெற்றியைப் பெற்றுத் தருகின்றது என்பதையும் நாம் இப்பொழுது பார்க்கலாம்.
சான்றாக:
              * தொழுகை, சுத்தத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.உளூ இல்லாமல் தொழ முடியாது.இடம் சுத்தம்,உடை சுத்தம்,உடல் சுத்தம் போன்றவை தொழுகைக்கு மிக அவசியம்.இந்த
சுத்தத்தை நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அது வெற்றியை தருமா?தராதா?
                *தொழுகை,நேரத்துடன்இணைக்கப்படுள்ளது.
நேரத்தை பேணுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா?மாட்டார்களா?
                  *தொழுகை ,நல்லொழுக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.நல்லொழுத்துடன் இருப்பது நமது வாழ்க்கையில் வெற்றியை தருமா?தராதா?                                                                           
                    *தொழுகை ,ஜகாத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.தர்மம் செய்வது வாழ்க்கையில் வெற்றியை தருமா?தராதா?
                     *தொழுகை ,ஒற்றுமையைக் கற்றுத்தருகின்றது வாழ்க்கையின் வெற்றிக்கு ஒற்றுமை அவசியமா இல்லையா?
                    *தொழுகை ,தலைமைக்கும் கட்டுப்படுவதின் அவசியத்தை கற்றுத்தருகின்றது வாழ்க்கையின் வெற்றிக்கு  தலைமைக்கு கட்டுப்படுவது அவசியமா?இல்லையா?
                     *தொழுகை ,பொறுமையோடு இணைக்கப்பட்டுள்ளது.பொறுமை என்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதைக் குறிக்கும் அவ்வாறு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியை பெறுவார்களா?மாட்டார்களா?
                      இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்........

                     இன்ஷா அல்லாஹ் - இனி மனித வாழ்வின் வெற்றிக்குத் தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் தொழுகை

எவ்வாறு தனக்குள் பிணைத்து வைத்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக அலசுவோம்.

Comments

Popular posts from this blog

இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம்           நாம் இத்தலைப்பின் கீழ் பார்க்கப்போவது ஒரு அரசியல் தலைவரை பற்றியோ அல்லது ஒரு நாட்டு தலைவரை பற்றியோ அல்ல மாறாக புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூலில் பதிவு செய்யப்பட்ட நபிமொழியான, عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏   "‏ أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ‏.                              " ‏ ‏.‏    நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளியாவார் அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் ஆண் தன் குடும்பத்தாரு