சென்ற மாத இதழின் தொடர்ச்சி: இன்று தொழுகையை பற்றி சில முஸ்லிம்களின் பார்வையானது, வெறும் சடங்காகவே பார்க்கப்படுகின்றது ,சிலர் அறியாமையால் அதை யோகா என்றும் கருதுகின்றனர் இதிலிருந்து நாம் சற்று மாற்றமாக சிந்திக் கடமைப்பட்டுள்ளோம். ஹய்யா அலல் ஸலாஹ் ஹைய்யா அலல் ஃபலாஹ்,தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொழியில் கேட்க கூடிய வாசகங்கள் தான்! قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ . ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்(23:1) الَّذِيْنَ هُمْ في صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(23:2) இந்த ஆயத்தில் நாம் اَفْلَحَ வெற்றி மற்றும் صل