சென்ற மாத இதழின் தொடர்ச்சி: இன்று தொழுகையை பற்றி சில முஸ்லிம்களின் பார்வையானது, வெறும் சடங்காகவே பார்க்கப்படுகின்றது ,சிலர் அறியாமையால் அதை யோகா என்றும் கருதுகின்றனர் இதிலிருந்து நாம் சற்று மாற்றமாக சிந்திக் கடமைப்பட்டுள்ளோம். ஹய்யா அலல் ஸலாஹ் ஹைய்யா அலல் ஃபலாஹ்,தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொழியில் கேட்க கூடிய வாசகங்கள் தான்! قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ . ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்(23:1) الَّذِيْنَ هُمْ في صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(23:2) இந்த ஆயத்தில் நாம் اَفْلَحَ வெற்றி மற்றும் صل
தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி SUCCESS THROUGH SALAAH இக்கால இளைய சமுதாயத்தை கருதி அவர்களை தொழுகையாளிகளாக ஆக்கிட மேலும் நாம் நமது தொழுகையை உயிரோட்டத்துடன் தொழுதிட ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு' நீடூர் S.Aமன்சூர் அலி' அவர்களால் பல ஊர்களில் "தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி(SUCCESS THROUGH SALAAH)"என்ற தலைப்பில் பலமுறை பயிலரகங்கள் நடத்தப்பட்டது அதில் கலந்துக்கொண்ட மக்கள், பயனடைந்ததைக் கருத்தில் கொண்டு இது தமிழ் பேசும் அனைத்து முஸ்லிம்களிடமும் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்துடன்,அங்கு கூறப்படும் கருத்துக்களைத் தழுவி அதை ஒரு எழுத்து வடிவில் கொண்டு வருவதே என் முயற்சி(எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக) முன்னுரை : தொழுகையின் முக்கியத்துவம்: தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். தொழுகை தீனின் தூண்